6 July 2017


NATIONAL FORUM OF BSNL UNIONS & ASSOCIATIONS
விருதுநகர் மாவட்டம்


பேரெழுச்சியுடன் நடந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம். 



        நமது தேசிய கூட்டமைப்பு அறைகூவல் விடுத்த ஜூலை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தோழர்கள் நாடுமுழுவதும் பேரெழுச்சியுடனும் , பெரும் உற்சாகத்துடனும் , ஒரு பெரு விழாவைக் கொண்டாடும் விதத்தில் நடத்தி முடித்துள்ளார்கள். போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட தோழர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள் . நமது போராட்டம் நாடெங்கிலுமுள்ள ஊழியர்களிடத்தில் ஒரு ஆழ்ந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.


         நமது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக சகோதர சங்கங்கள் தாமாக முன்வந்து நமது போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டுள்ளனர்.  டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் BSNLEU சங்கத்தில் பொதுச்செயலாளர் தோழர் அபிமன்யு அவர்கள் கலந்து கொண்டு நமது போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளார். மேலும் AIBSNLEA சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் பிரகலாத் ராய் அவர்களும் , SNEA சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் G.L.ஜோகி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களில் BSNLEU சங்கத்தின் தமிழ்மாநிலச் செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் கோயம்புத்தூரிலும் , ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர் முருகையா சென்னை CGM அலுவலகத்திலும் கலந்து கொண்டு நமது போராட்டம் வெற்றியடைய தங்களது வாழ்த்துக்களைத்தெரிவித்தனர். விருதுநகர் மாவட்ட BSNLEU சங்கத்தின் முன்னாள் மாவட்டச்செயலர் தோழர் அய்யாச்சாமி அவர்கள் காரைக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.அவர்களுக்கு விருதுநகர் மாவட்ட NFBUA கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.





        நமது மாவட்டத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மிகுந்த உற்சாகத்துடன் நடந்து முடிந்துள்ளது. முதல் நாள் போராட்டத்தில் NFTE சங்கத்தின் மாவட்டத்தலைவர் தோழர் ராகவன் தலைமை தாங்கினார். NFTE மாவட்டச் செயலர் தோழர் ராம்சேகர் அவர்கள் துவக்கவுரையாற்றினார். SEWA சங்கத்தின் மாவட்டத்தலைவர் தோழர் I.கோவிந்தன் அவர்களும் , SEWA சங்கத்தின் மாநில துணைச்செயலர் தோழர் பிரேம்குமார் அவர்களும் , NFTE சங்க மாநில உதவிச்செயலர் தோழர் ரமேஷ் அவர்களும் , TEPU சங்கம் சார்பாக தோழர் கணேசன் , FNTO சங்க மாவட்டச் செயலர் தோழர் பாண்டுரெங்கன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப்பேசினார்கள்.

இரண்டாம் நாள் போராட்டத்தில் NFTE சங்க ராஜபாளையம் கிளையின் முன்னாள் தலைவர் தோழர் பிள்ளையார் தலைமை தாங்கினார். NFTE சங்கத்தின் மாநில உதவிச்செயலர் தோழர் முருகேசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  விருதுநகர் மாவட்ட NFTE சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலர் தோழர் S.P.மதிவாணன் கலந்து கொண்டு தனது வாழ்த்துரையை வழங்கினார். விருதுநகர் மாவட்ட NFTE சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலர் தோழர் ஜெபக்குமார் மற்றும் முன்னாள் NFTE சங்க மாநில அமைப்புச்செயலர் தோழர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். TMTCLU ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அதன் மாவட்டத்தலைவர் தோழர் அழகர் அவர்கள் தனது நீண்ட நெடியதொரு வாழ்த்துரையை வழங்கிச் சிறப்பித்தார்.

நமது மாவட்டத்தில் போராட்டம் உற்சாகமாக நடந்து முடிந்துள்ளது. BSNLEU சங்கத்தின் அகில இந்திய மற்றும் தமிழகத்தலைவர்கள் நமது போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு நமது போராட்டத்திற்கு வலுசேர்த்திருக்கும் நிலையில் விருதுநகர் மாவட்ட BSNLEU சங்கம் நமது போராட்டத்தை புறக்கணித்தது நம்மை வருத்தமடையச் செய்துள்ளது. ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டிய சூழ்நிலையில் BSNLEU சங்கத்துடன் ஒன்று சேர்ந்து பயணிக்க NFTE சங்கம் எப்போதும் தயாராகவே உள்ளது.

        கரம் கோர்ப்போம் ! வெற்றி பெறுவோம்.

போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவருக்கும் விருதுநகர் மாவட்ட NFBUA கூட்டமைப்பு மீண்டும் ஒரு முறை தனது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

வாழ்த்துக்களுடன்


 N.ராம்சேகர்                  G.ராஜகுரு               V.கணேசன்           S.பாண்டுரெங்கன்
மாவட்டச் செயலர்              மாவட்டச் செயலர்          மாவட்டச் செயலர்         மாவட்டச் செயலர்
       NFTE                       SEWA                       TEPU                FNTO