25 July 2016

5வது தமிழ் மாநில மாநாடு



நமது தமிழ்மாநிலச் சங்கத்தின் 5வது மாநில மாநாடு வேலூர் நகரத்தில் 21.07.2016 முதல் 22.07.2016 வரை சிறப்பாக நடைபெற்றது. வேலூர் தோழர்கள் சிறப்பான ஏற்ப்பாட்டைச் செய்திருந்தனர். புதுவெள்ளமென குவிந்த தோழர்களுக்கு மத்தியில் நமது தேசியக் கொடியும் , சங்கக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது. 
தோழமைச் சங்கத்தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். நமது CGM திருமதி பூங்குழலி அவர்களின் கவிமணம் மிக்க வாழ்த்துரை நமது மாநாட்டுக்கு பெருமை சேர்த்தது.

பொதுவுடமை இயக்கத்தின் செயலர் தோழர் முத்தரசன் அவர்களும் , தொழிலாளிகளின் தோழன் மூர்த்தி அவர்களும் சிறப்பான வாழ்த்துரைகளை வழங்கினர்.

நமது பொதுச்செயலர் தோழர் சிங் அவர்களும் , அகில இந்திய தலைவர் தோழர் இஸ்லாம் அவர்களும் இருதினங்களும் முழுமையாக கலந்து கொண்டு மாநாட்டைச் சிறப்பித்தனர்.


மகளிர் மற்றும் இளைஞர் அணியின் அமர்வு தோழர்கள் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டதாக இருந்தது.


தோழர் பட்டாபி அவர்களது பாராட்டு விழா சேலம் மாவட்டச் செயலர் தோழர் பாலகுமார் அவர்களது பாராட்டுரையினால் மிளிர்ந்தது.


தலைவராக புதுவைத் தோழர் காமராஜ் அவர்களும்
செயலராக தஞ்ஞை நடராசன் அவர்களும்
பொருளராக கோவை சுப்பாராயன் அவர்களும் 

தோழர்களின் ஏகோபித்த ஆதரவோடு  நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

நமது மாவட்டத்திலிருந்து மாவட்ட துணைச்செயலர்  தோழர் ரமேஷ் அவர்கள் மாநில துணைச்செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துகள்